Friday, November 14, 2008

இருள்வெளி!




கருப்பு நிலா



தெப்பத்தின்
நீரலையும் படிகளில்
குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன,
ஓராயிரம் மீன்கள்.
ஆழத்தின் நடுவிலிருந்து
அபயம்கேட்டு எழுகிறது,
திரட்சியில்லாத
கை ஒன்று!
திறந்திருக்கும்
அதன் உள்ளங்கையில்,
'உ'வோ, '+'யோ எழுதியிருக்கிறது.
பிறைநிலவாகக் கூட இருக்கலாம்.
நீரில்பாய
நான் முயலுகையில்,
காக்கும் கடவுள்
என்முன் தோன்றினார்.
அபயம் கேட்ட
கையை புன்னகையுடன் பார்த்தார்.
*
அபயம் கேட்ட கை
உடலாய் மிதக்கிறது,
இப்போது நீரில்.
கையில் காணப்பட்ட
குறி
காணாமல் போயிருந்தது.
இருள்வெளியில்
பதுங்கிக்கொண்ட
கடவுளுக்கு பூஜை நடக்கிறது.
மணி ஒலி கேட்கிறது.
*
குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன,
ஓராயிரம் மீன்கள்.
நன்றி : திண்ணை

No comments: