Friday, October 31, 2008

என்னவென்று சொல்வேன்?


கருப்பு நிலா
னச் சுவற்றின் வெண்பரப்பில்
முதலாய்ப் படியும் நிழலில்
தெரிகிறது,
ஒரு பிம்பம்.
பிம்பத்தின்
ஓர் புள்ளியிலிருந்து
திரண்டு எழும் உருவத்தில்,
ஆனந்திக்கும் மனம்.
கர்வமும் வெட்கமுமாய்,
நடுங்குகிறது,
தேகம்.
சொல்லத் தெரிந்த வார்த்தைகள் தான்
துவள்கின்றன
முன்னே.
சொல்லத் தெரியாத
மழலையின்
குழற்றலாய்
சொல்லத் துவங்குமுன்...
நீயே சொல்கிறாய்...
karuppunilaa@gmail.com
நன்றி: உயிரோசை

No comments: